அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில், அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள்; தமக்கிடையே பகைமை பாராட்டும் இருவரைத் தவிர. (அவ்விருவரைப் பற்றி) 'இவ்விருவரும் சமரசம் செய்துகொள்ளும் வரை இவர்களைப் பிற்படுத்துங்கள்' என்று கூறப்படும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள், “திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காத ஒவ்வொரு நபரும் மன்னிக்கப்படுகிறார்; தனக்கும் இன்னொரு மனிதருக்கும் இடையில் பகைமை கொண்ட ஒருவரைத் தவிர. ‘இவ்விருவரும் சமாதானம் ஆகும் வரை அவர்களை விட்டுவிடுங்கள்’ எனக் கூறப்படும்.”