அன்-நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "நீங்கள் இறைநம்பிக்கையாளர்களை, அவர்கள் தங்களுக்குள் கருணை காட்டுவதிலும், தங்களுக்குள் அன்பு செலுத்துவதிலும், கனிவாக நடந்துகொள்வதிலும், ஓர் உடலைப் போன்று இருப்பதைக் காண்பீர்கள். அந்த உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு சுகவீனமுற்றால், அதனுடன் முழு உடலும் தூக்கமின்மையையும் காய்ச்சலையும் பகிர்ந்துகொள்ளும்."
وعن النعمان بن بشير رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم " مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم، مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى” ((متفق عليه)) .
நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "விசுவாசிகள் தங்களின் பரஸ்பர அன்பு, கருணை மற்றும் இரக்கம் ஆகியவற்றில் ஓர் உடலைப் போன்றவர்கள். அதன் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால், உடல் முழுவதும் அதனுடன் சேர்ந்து விழித்திருக்கின்றது மற்றும் காய்ச்சல் காண்கின்றது".