அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் மல்யுத்த வீரர் என்று யாரைக் கருதுகிறீர்கள்? மக்கள் பதிலளித்தார்கள்: மல்யுத்தத்தில் மற்ற ஆண்களால் தோற்கடிக்க முடியாதவரே. அவர் (ஸல்) கூறினார்கள்: இல்லை, கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே ஆவார்.