وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: كُتب على ابن آدم نصيبه من الزنا مدرك ذلك لا محالة: العينان زناهما النظر، والأذنان زناهما الاستماع، واللسان زناه الكلام، واليد زناها البطش، والرجل زناها الخطا، والقلب يهوى ويتمنى، ويصدق ذلك الفرج أو يكذبه . ((متفق عليه. وهذا لفظ مسلم، ورواية البخاري مختصرة)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆதமுடைய மகனுக்கு ஸினாவில் (விபச்சாரத்தில்) அவனது பங்கு எழுதப்பட்டுள்ளது; அதை அவன் அடைந்தே தீருவான். கண்களின் ஸினா (காம இச்சையுடன்) பார்ப்பதாகும்; காதுகளின் ஸினா (காம இச்சையைத் தூண்டும் விஷயங்களைக்) கேட்பதாகும்; நாவின் ஸினா (காம இச்சையுடன்) பேசுவதாகும்; கையின் ஸினா (காம இச்சையுடன்) தொடுவதாகும்; காலின் ஸினா (விலக்கப்பட்டதை நோக்கி) நடந்து செல்வதாகும். உள்ளம் (விலக்கப்பட்டதை) ஏங்குகிறது மற்றும் ஆசைப்படுகிறது; மர்ம உறுப்பு அதனை மெய்ப்பிக்கிறது அல்லது பொய்ப்பிக்கிறது."
(நூல்: புகாரி மற்றும் முஸ்லிம். இது முஸ்லிமில் உள்ள வாசகமாகும்; புகாரியின் வாசகம் சுருக்கமானது).