இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6347ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي سُمَىٌّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ‏.‏ قَالَ سُفْيَانُ الْحَدِيثُ ثَلاَثٌ زِدْتُ أَنَا وَاحِدَةً، لاَ أَدْرِي أَيَّتُهُنَّ هِيَ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சோதனையின் கடுமையிலிருந்தும், துர்பாக்கியம் ஆட்கொள்வதிலிருந்தும், விதியின் கேட்டிலிருந்தும், எதிரிகள் (தமது துன்பத்தைக் கண்டு) களிப்பதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.
சுஃப்யான் அவர்கள் கூறினார்கள்: “இந்த ஹதீஸில் மூன்று விஷயங்கள் (மட்டுமே) இருந்தன; நான் ஒன்றைச் சேர்த்தேன். அது (இவற்றில்) எதுவென்று எனக்குத் தெரியாது.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح