இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3873சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ ‏ ‏ اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ كُلِّ شَىْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது கூறுவார்கள்: "அல்லாஹும்ம ரப்பஸ்-ஸமாவாதி வ ரப்பல்-அர்ளி, வ ரப்ப குல்லி ஷைஇன், ஃபாலிகல்-ஹப்பி வந்-நவா, முன்ஸிலத்-தவ்ராத்தி வல்-இன்ஜீலி வல்-குர்ஆனில்-'அழீம். அஊது பிக மின் ஷர்ரி குல்லி தாப்பத்தின் அன்த ஆகிதுன் பினாஸியத்திஹா, அன்தல்-அவ்வலு ஃபலைஸ கப்லக ஷைஉன், வ அன்தல்-ஆகிரு ஃபலைஸ பஃதக ஷைஉன், வ அன்தழ்-ழாஹிரு ஃபலைஸ ஃபவ்கக ஷைஉன், வ அன்தல்-பாதினு ஃபலைஸ தூனக ஷைஉன், இக்ளி அன்னத்-தைன வ அக்னினீ மினல்-ஃபக்ர்."

(யா அல்லாஹ்! வானங்களின் இறைவா, பூமியின் இறைவா, எல்லாப் பொருட்களின் இறைவா! விதையையும், கொட்டையையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல் மற்றும் மகத்துவமிக்க குர்ஆனை இறக்கியருளியவனே! நீ எதன் நெற்றி முடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாயோ, அந்த ஒவ்வொரு உயிரினத்தின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீயே ஆதியோன் (அல்-அவ்வல்), உனக்கு முன் எதுவும் இல்லை; நீயே அந்தம் (அல்-ஆகிர்), உனக்குப் பின் எதுவும் இல்லை; நீயே மேலானவன் (அழ்-ழாஹிர்), உனக்கு மேலே எதுவும் இல்லை; நீயே அருகிலிருப்பவன் (அல்-பாதின்), உன்னை விட அருகில் எதுவும் இல்லை. என் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையிலிருந்து என்னை நீக்கி தன்னிறைவளிப்பாயாக).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)