அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் படுக்கைக்குச் செல்லும் போது (பின்வரும் துஆவை) ஓதுவார்கள்:
“எங்களுக்கு உணவளித்து, நீர் புகட்டி, (எங்கள் தேவைகளுக்கு) போதுமானவற்றை அளித்து, எங்களுக்கு அடைக்கலம் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். போதுமானவற்றை அளிப்பதற்கோ அல்லது அடைக்கலம் அளிப்பதற்கோ யாருமில்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.”
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا وَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُؤْوِيَ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் படுக்கைக்குச் செல்லும்போது பின்வருமாறு கூறுவார்கள்: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே எங்களுக்கு உணவளித்தான்; பருகக் கொடுத்தான்; எங்களுக்குப் போதுமானான்; எங்களுக்குப் புகலிடம் அளித்தான். (பாதுகாவலனாய்) போதுமானவனும் புகலிடம் அளிப்பவனும் இல்லாத எத்தனையோ பேர் உள்ளனர்!”
وعن أنس رضي الله عنه، أن النبي صلى الله عليه وسلم، كان إذا أوى فراشه قال: الحمد لله الذي أطعمنا وسقانا، وكفانا وآوانا، فكم ممن لا كافي له ولا مئوي ((رواه مسلم)).
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும்போதெல்லாம், "அல்ஹம்து லில்லாஹி-ல்லதீ அத்அமனா வ ஸகானா, வ கஃபானா வ ஆவானா, ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு வ லா முஃவிய (எங்களுக்கு உணவளித்து, பானம் புகட்டி, எங்கள் தேவைகளை நிறைவேற்றி, எங்களுக்கு அடைக்கலம் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது. (ஆனால்,) தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பவரும், அடைக்கலம் கொடுப்பவரும் இல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள் (என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது))" என்று கூறுவார்கள்.
முஸ்லிம்.