இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்:
'நான் உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ மரணிக்காதவன்; ஜின்களும் மனிதர்களும் மரணிக்கின்றனர்.'
الثاني: عن ابن عباس رضي الله عنهما أيضاً أن رسول الله صلى الله عليه وسلم كان يقول: اللهم لك أسلمت وبك آمنت، وعليك توكلت، وإليك أنبت ، وبك خاصمت. اللهم أعوذ بعزتك، لا إله إلا أنت أن تضلني، أنت الحي الذي لا تموت، والجن والإنس يموتون ((متفق عليه)) . ((وهذا لفظ مسلم، واختصره البخاري)).
இப்னு அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்பவர்களாய் இருந்தார்கள்:
பொருள்: "யா அல்லாஹ்! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன்னையே நான் ஈமான் கொண்டேன்; உன் மீதே நான் நம்பிக்கை வைத்தேன்; உன் பக்கமே நான் திரும்பினேன்; உனது உதவியைக் கொண்டே நான் (சத்தியத்திற்காக) வழக்காடினேன். யா அல்லாஹ்! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ என்னை வழிதவறச் செய்துவிடாதபடி, உனது வல்லமையைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீயே ஒருபோதும் மரணிக்காத உயிருள்ளவன்; ஆனால், ஜின்களும் மனிதர்களும் இறந்துவிடுவார்கள்."