இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6000ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا، وَأَنْزَلَ فِي الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الْجُزْءِ يَتَرَاحَمُ الْخَلْقُ، حَتَّى تَرْفَعَ الْفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا خَشْيَةَ أَنْ تُصِيبَهُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: அல்லாஹ் கருணையை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவன் தொண்ணூற்றொன்பது பாகங்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, ஒரு பாகத்தை பூமிக்கு இறக்கினான். அந்த ஒரே ஒரு பாகத்தின் காரணத்தினால் அவனுடைய படைப்புகள் தங்களுக்குள் கருணை காட்டிக் கொள்கின்றன. எந்த அளவிற்கென்றால், ஒரு பெண் குதிரை கூட, தன் குட்டியை மிதித்துவிடக் கூடாது என்பதற்காக, தன் குளம்புகளை அதனிடமிருந்து உயர்த்திக் கொள்கிறது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح