புகழை அல்லாஹ்வை விட அதிகம் விரும்புபவர் எவருமில்லை; இதனால்தான் அவன் தன்னைப் புகழ்ந்து கொண்டான். அல்லாஹ்வை விட அதிக ரோஷம் (தன் கட்டளைகள் மீறப்படுவதில் கோபம்) கொண்டவர் எவருமில்லை; இதனால்தான் அருவருக்கத்தக்க செயல்களை (விபச்சாரம், ஓரினச்சேர்க்கை போன்ற பாவங்களை) அவன் தடை செய்துள்ளான்.