حَدَّثَنِي عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ عَاصِمٍ الْكِلاَبِيُّ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَىَّ. قَالَ وَلَمْ يَسْأَلْهُ عَنْهُ. قَالَ وَحَضَرَتِ الصَّلاَةُ فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم الصَّلاَةَ قَامَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْ فِيَّ كِتَابَ اللَّهِ. قَالَ " أَلَيْسَ قَدْ صَلَّيْتَ مَعَنَا ". قَالَ نَعَمْ. قَالَ " فَإِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ ذَنْبَكَ ". أَوْ قَالَ " حَدَّكَ ".
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு பாவத்தைச் செய்துவிட்டேன்; ஆகவே என் மீது அத்தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அது குறித்து அவரிடம் கேட்கவில்லை. பிறகு தொழுகைக்கான நேரம் வந்தது; அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது, அந்த மனிதர் (அவர்களிடம்) எழுந்து சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு பாவத்தைச் செய்துவிட்டேன்; ஆகவே, அல்லாஹ்வின் வேதப்படி என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நீர் எம்முடன் தொழவில்லையா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் உமது பாவத்தை மன்னித்துவிட்டான்" அல்லது, "உமது தண்டனையை (மன்னித்துவிட்டான்)" என்று கூறினார்கள்.