இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7513ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ حَبْرٌ مِنَ الْيَهُودِ فَقَالَ إِنَّهُ إِذَا كَانَ يَوْمَ الْقِيَامَةِ جَعَلَ اللَّهُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ، وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ، وَالْمَاءَ وَالثَّرَى عَلَى إِصْبَعٍ، وَالْخَلاَئِقَ عَلَى إِصْبَعٍ، ثُمَّ يَهُزُّهُنَّ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَنَا الْمَلِكُ‏.‏ فَلَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَضْحَكُ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ تَعَجُّبًا وَتَصْدِيقًا، لِقَوْلِهِ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏{‏وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏يُشْرِكُونَ‏}‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
யூதர்களில் ஒரு மதகுரு வந்து, "மறுமை நாள் வரும்போது, அல்லாஹ் வானங்களை ஒரு விரலிலும், பூமிகளை ஒரு விரலிலும், நீரையும் மண்ணையும் ஒரு விரலிலும், (மற்ற) படைப்பினங்கள் அனைத்தையும் ஒரு விரலிலும் வைப்பான். பிறகு அவற்றை அசைத்து, 'நானே அரசன்! நானே அரசன்!' என்று கூறுவான்" என்று சொன்னார்.
(இதைக் கேட்டதும்) நபி (ஸல்) அவர்கள், அந்த யூதரின் கூற்றை உண்மை என ஏற்று, வியப்படைந்தவர்களாகத் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்ததை நான் கண்டேன்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள், "வமா கதருல்லாஹ ஹக்க கத்ரிஹி..." (என்று தொடங்கி) "...யுஷ்ரிகூன்" (என்பது வரையிலான) இறைவசனத்தை ஓதினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح