حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَثَلُ الْمُؤْمِنِ كَالْخَامَةِ مِنَ الزَّرْعِ تُفَيِّئُهَا الرِّيحُ مَرَّةً، وَتَعْدِلُهَا مَرَّةً، وَمَثَلُ الْمُنَافِقِ كَالأَرْزَةِ لاَ تَزَالُ حَتَّى يَكُونَ انْجِعَافُهَا مَرَّةً وَاحِدَةً . وَقَالَ زَكَرِيَّاءُ حَدَّثَنِي سَعْدٌ، حَدَّثَنَا ابْنُ كَعْبٍ، عَنْ أَبِيهِ، كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
நம்பிக்கையாளரின் உதாரணமாவது, ஒரு பசுமையான இளநாற்றைப் போன்றதாகும்; அதனை காற்று சில சமயம் வளைக்கும், மற்றும் சில சமயம் நிமிர்த்தும். மேலும், நயவஞ்சகனின் உதாரணமாவது, ஒரு தேவதாரு மரத்தைப் போன்றதாகும்; அது (எந்தச் சலனமும் இன்றி) நேராகவே நிற்கும்; இறுதியில் ஒரேயடியாக வேரோடு சாய்ந்து விழும் வரை.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைநம்பிக்கையாளரின் உவமை, (காற்றில் அசைந்தாடும்) இளம் பயிரைப் போன்றதாகும். காற்று அதனை ஒருமுறை சாய்த்துவிடுகிறது; மறுமுறை நிமிர்த்துகிறது. அவனது ஆயுள் முடியும்வரை இந்நிலை நீடிக்கிறது. நயவஞ்சகனின் உவமை, (பூமிக்கடியில் இறுகிய) தேவதாரு மரத்தைப் போன்றதாகும். அது எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. இறுதியில் ஒரேயடியாக வேரோடு பிடுங்கப்படுகிறது."
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
(முன்னர் சென்ற) ஹதீஸைப் போன்றே இதுவும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. யஹ்யா அவர்களது அறிவிப்பில், "நிராகரிப்பாளரின் உவமை தேவதாரு மரத்தைப் போன்றதாகும்" என்று வந்துள்ளது.