இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5673ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الْجَنَّةَ ‏"‏‏.‏ قَالُوا وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ لاَ، وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ فَسَدِّدُوا وَقَارِبُوا وَلاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய செயலும் அவரைச் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை" என்று கூறக் கேட்டேன். அவர்கள் (நபித்தோழர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இல்லை, நானும்தான்; அல்லாஹ் தனது அருளாலும் கருணையாலும் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர (நானும் சொர்க்கம் செல்ல முடியாது). ஆகவே, நீங்கள் நேர்மையாகச் செயல்படுங்கள்; (இலக்கை) நெருங்கிச் செயல்படுங்கள்; உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஏனெனில், அவர் நன்மை செய்பவராயின் (உயிர் வாழ்வதால்) நன்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்; தீமை செய்பவராயின் அவர் (பாவத்திலிருந்து) மீட்சி பெறலாம்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2816 gஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ،
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ قَارِبُوا وَسَدِّدُوا وَاعْلَمُوا
أَنَّهُ لَنْ يَنْجُوَ أَحَدٌ مِنْكُمْ بِعَمَلِهِ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلاَ أَنْتَ قَالَ ‏"‏ وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِيَ
اللَّهُ بِرَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ ‏"‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நடுநிலையை மேற்கொள்ளுங்கள்; (சரியானதை) நெருங்குங்கள்; மேலும், உங்களில் எவரும் தம் செயல்களால் மட்டும் ஈடேற்றம் அடைய முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்."

அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! தாங்களுமா?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'நானும் இல்லை; அல்லாஹ் தனது கருணையினாலும் அருளினாலும் என்னை போர்த்திக் கொண்டாலன்றி.'

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح