அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களுக்கு ஆயுள் நீடித்தால், (விரைவில்) ஒரு கூட்டத்தினரை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்துடன் காலையில் (வீட்டை விட்டு) வெளியேறுவார்கள்; அவனது சாபத்துடன் மாலையில் (வீட்டிற்கு) திரும்புவார்கள். அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப் போன்ற (சாட்டைகள்) இருக்கும்.'