وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ رَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً مِنْ أَسْلَمَ وَرَجُلاً مِنَ الْيَهُودِ وَامْرَأَتَهُ .
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரையும் (அவர் விபச்சாரம் செய்ததற்காக), ஒரு யூதரையும் அவருடைய மனைவியையும் (அவர்கள் விபச்சாரம் செய்ததற்காக) கல்லெறிந்து கொன்றார்கள்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அபுல் காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உம்மீது மரணம் உண்டாகட்டும்)" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வ அலைக்கும் (உம்மீதும் அவ்வாறே)" என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) கோபமடைந்து, "அவர்கள் கூறியதை தாங்கள் கேட்கவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், நான் செவியுற்றேன்; அவர்களுக்குப் பதிலும் கொடுத்துவிட்டேன். அவர்கள் விஷயத்தில் நமக்கு(ப் பிரார்த்தனைக்கு)ப் பதிலளிக்கப்படும்; நம் விஷயத்தில் அவர்களுக்குப் பதிலளிக்கப்படாது" என்று கூறினார்கள்.