ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
சில கரடுமுரடான அரபுப் பாலைவனவாசிகள் (நாடோடிகள்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அந்த நேரம் (இறுதிநாள்) எப்போது வரும்?" என்று கேட்பது வழக்கம். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயது குறைந்தவரைப் பார்த்து, "இவர் வாழ்ந்து முதுமையை அடைவதற்கு முன்பே, உங்கள் மீது உங்களின் அந்த நேரம் (மரணத்தின் நேரம்) வந்துவிடும்" என்று கூறுவார்கள்.
ஹிஷாம் அவர்கள், "(இதன் மூலம்) அவர்களின் மரணத்தையே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்" என்று கூறினார்கள்.