அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "யார் ரமழான் மாத நோன்பை நோற்று, பின்னர் அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு (நோன்புகளை) நோற்கிறாரோ, அவர் காலமெல்லாம் (ஒரு முழு வருடத்திற்குரிய நன்மையை பெறும் வகையில்) நோன்பு நோற்றவரைப் போலாவார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.