இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

392சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ الْمَدَنِيُّ، عَنْ أَبِي سُهَيْلٍ، نَافِعِ بْنِ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ بِإِسْنَادِهِ بِهَذَا الْحَدِيثِ قَالَ ‏ ‏ أَفْلَحَ وَأَبِيهِ إِنْ صَدَقَ دَخَلَ الْجَنَّةَ وَأَبِيهِ إِنْ صَدَقَ ‏ ‏ ‏.‏
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) "அவன் உண்மையே சொல்லியிருந்தால், அவனது தந்தையின் மீது சத்தியமாக! அவன் வெற்றியடைந்து விட்டான். அவன் உண்மையே சொல்லியிருந்தால், அவனது தந்தையின் மீது சத்தியமாக! அவன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டான்."
ஹதீஸ் தரம் : 'மேலும் அவரது தந்தை' என்ற வார்த்தை கூட்டப்பட்டதால் ஷாத். (அல்பானி)
شاذ بزيادة وأبيه (الألباني)