இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4143ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنَا النُّعْمَانُ بْنُ بَشِيرٍ، قَالَ وَقَدْ أَعْطَاهُ أَبُوهُ غُلاَمًا فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ مَا هَذَا الْغُلاَمُ ‏"‏ ‏.‏ قَالَ أَعْطَانِيهِ أَبِي ‏.‏ قَالَ ‏"‏ فَكُلَّ إِخْوَتِهِ أَعْطَيْتَهُ كَمَا أَعْطَيْتَ هَذَا ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَرُدَّهُ ‏"‏ ‏.‏
நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அவர்களுடைய தந்தை அவர்களுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்கள். (அப்போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நுஃமானிடம்), "இந்த அடிமை யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என் தந்தை எனக்கு இவரை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்" என்று கூறினார். அப்போது (அவரது தந்தை பஷீரிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவருக்குக் கொடுத்தது போன்றே இவருடைய சகோதரர்கள் அனைவருக்கும் நீர் கொடுத்தீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் (பஷீர்), "இல்லை" என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அப்படியானால், இவரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح