حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حِجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ.
உம் கைஸ் பின்த் மிஹ்ஸின் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(சாதாரண) உணவு உண்ணத் துவங்காத என் சிறு வயது மகனை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். அவர்கள் அக்குழந்தையை எடுத்துத் தங்கள் மடியில் அமர்த்திக் கொண்டார்கள். அக்குழந்தை நபியவர்களின் ஆடையின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. எனவே, அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, அதனை கறைபட்ட (இடத்தின்) மீது ஊற்றினார்கள்; (கசக்கிக்) கழுவவில்லை.
மிஹ்ஸனின் மகள் உம்மு கைஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அவர்கள் (உம்மு கைஸ் (ரழி)) இன்னும் பால் குடி மறக்காத தமது குழந்தையுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள் (உம்மு கைஸ் (ரழி)) அக்குழந்தையை நபியவர்களின் மடியில் இட்டார்கள்; அக்குழந்தை நபியவர்களின் மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. நபியவர்கள் (ஸல்) அதன் மீது தண்ணீர் தெளித்ததைத்தவிர வேறு எதையும் செய்யவில்லை.
وَحَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ، - وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الأُوَلِ اللاَّتِي بَايَعْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ أُخْتُ عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ أَحَدُ بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ - قَالَ أَخْبَرَتْنِي أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِابْنٍ لَهَا لَمْ يَبْلُغْ أَنْ يَأْكُلَ الطَّعَامَ - قَالَ عُبَيْدُ اللَّهِ - أَخْبَرَتْنِي أَنَّ ابْنَهَا ذَاكَ بَالَ فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَاءٍ فَنَضَحَهُ عَلَى ثَوْبِهِ وَلَمْ يَغْسِلْهُ غَسْلاً .
உபய்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள்:
மிஹ்ஸன் அவர்களின் மகளாரான உம்மு கைஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பைஆ (உறுதிமொழி) செய்த, ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் சென்ற பெண்மணிகளில் ஒருவராக இருந்தார்கள். மேலும் அவர்கள், அஸத் பின் குஸைமா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான உக்காஷா பின் மிஹ்ஸன் (ரழி) அவர்களின் சகோதரியாக இருந்தார்கள்.
அவர் (அறிவிப்பாளர்) கூறினார்கள்: உம்மு கைஸ் (ரழி) அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாவது, அவர்கள் தம் மகனுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்; அக்குழந்தை அப்போது உணவு உண்ணும் பருவத்தை அடைந்திருக்கவில்லை.
அவர் (அறிவிப்பாளர் உபய்துல்லாஹ்) கூறினார்கள்: உம்மு கைஸ் (ரழி) அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாவது, அவர்களின் மகன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்துவிட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அதைத் தமது ஆடையின் மீது (குழந்தையின் சிறுநீரால் அசுத்தமான அந்தப் பகுதியில்) தெளித்தார்கள்; மேலும் அவர்கள் அதை முழுமையாகக் கழுவவில்லை.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ .
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரழி) அவர்கள், உணவு உண்ணத் துவங்காத தமது சிறு வயது மகனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்ததாக அறிவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் அமர்த்தியதும் அது அவர்களின் ஆடையின் மீது சிறுநீர் கழித்துவிட்டதால், அவர்கள் தண்ணீர் வரவழைத்து, அதை அதன் மீது தெளித்தார்களே தவிர, அதைக் கழுவவில்லை.