حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَوْ أَدْرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ. قُلْتُ لِعَمْرَةَ أَوَ مُنِعْنَ قَالَتْ نَعَمْ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
பெண்கள் (புதிதாக) உருவாக்கிக் கொண்டவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிந்திருந்தால், பனீ இஸ்ராயீல் சமூகத்துப் பெண்கள் (பள்ளிவாசல்களுக்குச் செல்வதிலிருந்து) தடுக்கப்பட்டது போன்று, (இந்த) பெண்களையும் பள்ளிவாசலுக்குச் செல்வதிலிருந்து தடுத்திருப்பார்கள்.
யஹ்யா பின் ஸயீத் (ஓர் அறிவிப்பாளர்) அவர்கள் அம்ரா (மற்றோர் அறிவிப்பாளர்) அவர்களிடம், "பனீ இஸ்ராயீல் சமூகத்துப் பெண்கள் (அவ்வாறு) தடுக்கப்பட்டிருந்தார்களா?" என்று கேட்டார்கள்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ يَحْيَى، - وَهُوَ ابْنُ سَعِيدٍ - عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ . قَالَ فَقُلْتُ لِعَمْرَةَ أَنِسَاءُ بَنِي إِسْرَائِيلَ مُنِعْنَ الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ .
அப்துர் ரஹ்மானின் மகளான அம்ரா அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரழி) அவர்கள் கூற நான் கேட்டேன்: பெண்கள் (அவர்களின் வாழ்க்கை முறையில்) புதிதாகப் புகுத்தியுள்ள காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிருந்தால், பனீ இஸ்ராயீலின் பெண்கள் (பள்ளிவாசலுக்குச் செல்வதிலிருந்து) தடுக்கப்பட்டதைப் போலவே, இவர்களையும் (பள்ளிவாசலுக்குச் செல்வதிலிருந்து) அவர்கள் நிச்சயமாகத் தடுத்திருப்பார்கள்.