இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2795ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَا مِنْ عَبْدٍ يَمُوتُ لَهُ عِنْدَ اللَّهِ خَيْرٌ، يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا، وَأَنَّ لَهُ الدُّنْيَا وَمَا فِيهَا، إِلاَّ الشَّهِيدَ، لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ، فَإِنَّهُ يَسُرُّهُ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ مَرَّةً أُخْرَى ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்விடம் (மறுமையில்) நன்மையைப் பெற்ற நிலையில் மரணிக்கும் எந்த அடியானும், இவ்வுலகமும் அதில் உள்ள அனைத்தும் அவனுக்குக் கொடுக்கப்பட்டாலும், இவ்வுலகிற்குத் திரும்பி வர விரும்பமாட்டான். இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவரைத் தவிர. ஏனெனில், அவர் உயிர்த்தியாகத்தின் சிறப்பைக் கண்டதால், இவ்வுலகிற்குத் திரும்பி வந்து (அல்லாஹ்வின் பாதையில்) மீண்டும் கொல்லப்பட விரும்புவார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4824ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، وَحُمَيْدٍ،
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَا مِنْ نَفْسٍ تَمُوتُ لَهَا عِنْدَ
اللَّهِ خَيْرٌ يَسُرُّهَا أَنَّهَا تَرْجِعُ إِلَى الدُّنْيَا وَلاَ أَنَّ لَهَا الدُّنْيَا وَمَا فِيهَا إِلاَّ الشَّهِيدُ فَإِنَّهُ يَتَمَنَّى
أَنْ يَرْجِعَ فَيُقْتَلَ فِي الدُّنْيَا لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ ‏ ‏ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் தனக்கு நன்மை இருக்கப்பெற்று மரணித்த எந்தவொரு ஆத்மாவும், இவ்வுலகமும் அதிலுள்ளவையும் தனக்குக் கிடைப்பதாக இருந்தாலும், உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டாது (மகிழ்ச்சியடையாது). உயிர்த்தியாகியைத் தவிர! ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை அவர் காண்பதால், இவ்வுலகிற்குத் திரும்பி வந்து மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح