இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1001ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، قَالَ سَأَلْتُ عَلْقَمَةَ هَلْ كَانَ ابْنُ مَسْعُودٍ شَهِدَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْجِنِّ قَالَ فَقَالَ عَلْقَمَةُ أَنَا سَأَلْتُ ابْنَ مَسْعُودٍ فَقُلْتُ هَلْ شَهِدَ أَحَدٌ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْجِنِّ قَالَ لاَ وَلَكِنَّا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَفَقَدْنَاهُ فَالْتَمَسْنَاهُ فِي الأَوْدِيَةِ وَالشِّعَابِ فَقُلْنَا اسْتُطِيرَ أَوِ اغْتِيلَ - قَالَ - فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ فَلَمَّا أَصْبَحْنَا إِذَا هُوَ جَاءٍ مِنْ قِبَلِ حِرَاءٍ - قَالَ - فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَقَدْنَاكَ فَطَلَبْنَاكَ فَلَمْ نَجِدْكَ فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ ‏.‏ فَقَالَ ‏"‏ أَتَانِي دَاعِي الْجِنِّ فَذَهَبْتُ مَعَهُ فَقَرَأْتُ عَلَيْهِمُ الْقُرْآنَ ‏"‏ ‏.‏ قَالَ فَانْطَلَقَ بِنَا فَأَرَانَا آثَارَهُمْ وَآثَارَ نِيرَانِهِمْ وَسَأَلُوهُ الزَّادَ فَقَالَ ‏"‏ لَكُمْ كُلُّ عَظْمٍ ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ يَقَعُ فِي أَيْدِيكُمْ أَوْفَرَ مَا يَكُونُ لَحْمًا وَكُلُّ بَعَرَةٍ عَلَفٌ لِدَوَابِّكُمْ ‏"‏ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَلاَ تَسْتَنْجُوا بِهِمَا فَإِنَّهُمَا طَعَامُ إِخْوَانِكُمْ ‏"‏ ‏.‏
ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அல்கமா (ரஹ்) அவர்களிடம், “ஜின்கள் வந்த அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் இருந்தார்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அல்கமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நானும் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களிடம், “ஜின்கள் வந்த அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உங்களில் எவரேனும் இருந்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இல்லை! (நாங்கள் யாரும் இருக்கவில்லை)” என்று பதிலளித்தார்கள்.

மேலும் (இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள்) கூறியதாவது:
“ஆனால், ஒரு நாள் இரவு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். திடீரென அவர்களைக் காணவில்லை. உடனே நாங்கள் அவர்களைப் பள்ளத்தாக்குகளிலும் கணவாய்களிலும் தேடினோம். (அவர்களைக் காணாததால்) ‘அவர் (ஜின்களால்) கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது (எதிரிகளால்) கொல்லப்பட்டிருக்கலாம்’ என்று பேசிக்கொண்டோம். ஒரு சமூகம் கழிக்கக்கூடிய இரவுகளிலேயே மிக மோசமான ஓர் இரவை நாங்கள் கழித்தோம்.

விடிந்ததும், இதோ! அவர்கள் ஹிரா (குகை) திசையிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். உடனே நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் காணாமல் நாங்கள் தேடினோம்; தாங்கள் கிடைக்கவில்லை. அதனால், ஒரு சமூகம் கழிக்கக்கூடிய இரவுகளிலேயே மிக மோசமான ஓர் இரவை நாங்கள் கழித்தோம்’ என்று கூறினோம்.

அதற்கு அவர்கள், ‘ஜின்களின் அழைப்பாளர் என்னிடம் வந்தார். அவருடன் நான் சென்றேன். அவர்களுக்கு குர்ஆனை ஓதிக் காட்டினேன்’ என்று கூறினார்கள்.”

(இப்னு மஸ்வூத் (ரழி) தொடர்ந்தார்கள்:) “பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்துச் சென்று, ஜின்கள் இருந்த இடங்களையும், அவற்றின் நெருப்புத் தணல் இருந்த இடங்களையும் எங்களுக்குக் காட்டினார்கள். அப்போது ஜின்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உணவைக் கேட்டன. அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட (பிராணிகளின்) எலும்புகள் அனைத்தும் உங்கள் கையில் கிடைக்கும்போது, முன்னைவிட அதிகச் சதையுள்ளதாக இருக்கும். கால்நடைச் சாணங்கள் அனைத்தும் உங்கள் கால்நடைகளுக்குத் தீவனமாகும்’ என்று கூறினார்கள்.”

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “எனவே, அவ்விரண்டையும் கொண்டு நீங்கள் மலஜலம் கழித்துச் சுத்தம் (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள். ஏனெனில், அவை உங்கள் சகோதரர்களான (ஜின்களின்) உணவாகும்” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح