இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7199, 7200ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْمَنْشَطِ وَالْمَكْرَهِ‏.‏ ‏‏وَأَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ، وَأَنْ نَقُومَ ـ أَوْ نَقُولَ ـ بِالْحَقِّ حَيْثُمَا كُنَّا لاَ نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لاَئِمٍ ‏ ‏‏.‏
உபாதா பின் அஸ்ஸாமித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், நாங்கள் (எந்தச் செயலிலும்) சுறுசுறுப்பாக இருக்கும்போதும், சோர்வாக இருக்கும்போதும் (மன விருப்பத்துடனும், மன வருத்தத்துடனும்) (அவர்களின் கட்டளைகளை) செவிமடுப்போம் என்றும், (அவற்றுக்குக்) கட்டுப்படுவோம் என்றும்; (முஸ்லிம்) ஆட்சியாளர்களிடம் அதிகாரம் குறித்துச் சச்சரவு செய்ய மாட்டோம் என்றும்; நாங்கள் எங்கிருந்தாலும் சத்தியத்தை நிலைநிறுத்துவோம் - அல்லது சத்தியத்தையே பேசுவோம் - என்றும்; அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிச்சொல்லுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் நாங்கள் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்தோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1709 eஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ وَعَلَى أَثَرَةٍ عَلَيْنَا وَعَلَى أَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ وَعَلَى أَنْ نَقُولَ بِالْحَقِّ أَيْنَمَا كُنَّا لاَ نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لاَئِمٍ ‏.‏
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 'நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எங்களுடைய கஷ்டத்திலும் செழிப்பிலும், விருப்பத்திலும் வெறுப்பிலும் (தலைமைக்குச்) செவிமடுத்துக் கீழ்ப்படிவோம் என்றும்; எங்களுக்குப் பாதகமாகப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (அதை ஏற்று, கட்டுப்படுவோம் என்றும்); ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களுடன் (அவர்களின் அதிகாரத்தில்) சண்டையிட மாட்டோம் என்றும்; நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையைச் சொல்வோம்; அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் பைஅத் (உறுதிமொழி) செய்தோம்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح