حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْمَنْشَطِ وَالْمَكْرَهِ. وَأَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ، وَأَنْ نَقُومَ ـ أَوْ نَقُولَ ـ بِالْحَقِّ حَيْثُمَا كُنَّا لاَ نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لاَئِمٍ .
உபாதா பின் அஸ்ஸாமித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், நாங்கள் (எந்தச் செயலிலும்) சுறுசுறுப்பாக இருக்கும்போதும், சோர்வாக இருக்கும்போதும் (மன விருப்பத்துடனும், மன வருத்தத்துடனும்) (அவர்களின் கட்டளைகளை) செவிமடுப்போம் என்றும், (அவற்றுக்குக்) கட்டுப்படுவோம் என்றும்; (முஸ்லிம்) ஆட்சியாளர்களிடம் அதிகாரம் குறித்துச் சச்சரவு செய்ய மாட்டோம் என்றும்; நாங்கள் எங்கிருந்தாலும் சத்தியத்தை நிலைநிறுத்துவோம் - அல்லது சத்தியத்தையே பேசுவோம் - என்றும்; அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிச்சொல்லுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் நாங்கள் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்தோம்.