حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، وَعَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முலாமஸா மற்றும் முனாபதா (முறையிலான விற்பனையை) தடை செய்தார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அஸ்ர்’ தொழுகைக்குப் பிறகு சூரியன் மறையும் வரையிலும், ‘சுப்ஹ்’ தொழுகைக்குப் பிறகு சூரியன் உதயமாகும் வரையிலும் (நஃபிலான) தொழுகைகளைத் தொழுவதைத் தடுத்தார்கள்.
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، - رضى الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ صِيَامِ يَوْمَيْنِ يَوْمِ الأَضْحَى وَيَوْمِ الْفِطْرِ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஈதுல் அழ்ஹா மற்றும் ஈதுல் ஃபித்ர் ஆகிய இரண்டு நாட்களில் (அவை அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் மற்றும் மகிழ்ச்சி கொண்டாடும் நாட்கள் என்பதால்) நோன்பு நோற்பதைத் தடை செய்தார்கள்.