حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَمْنَعُ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي جِدَارِهِ . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللَّهِ لأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ.
அல்-அஃரஜ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'தம் அண்டை வீட்டார் தம் (வீட்டுச்) சுவரில் மர ஆப்பைப் பதிப்பதை எவரும் தடுக்க வேண்டாம்.'" அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (தம் தோழர்களிடம்) கூறினார்கள், "நீங்கள் ஏன் இதைப் புறக்கணிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இதை உங்களுக்கு நிச்சயமாக அறிவிப்பேன்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
உங்களில் எவரும், தமது அண்டை வீட்டார் தம் சுவரில் உத்திரம் பதிப்பதை தடுக்க வேண்டாம்.
பிறகு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: (நபியவர்களின் இந்த கட்டளையை) நீங்கள் புறக்கணிப்பதை நான் காண்கிறேனே, இது என்ன?
அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் நிச்சயமாக இதை உங்கள் தோள்களுக்கு இடையில் எறிவேன் (இதை உங்களுக்கு அறிவிப்பேன்).