حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ، يُخْبِرُونَهُ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ .
`அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`
`அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எவன் கர்வத்தினால் தன் ஆடையை (தனக்குப் பின்னால்) இழுத்துச் செல்கிறானோ, அவனை அல்லாஹ் பார்க்க மாட்டான்.’`
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'பெருமையினால் தனது ஆடையை (தரையில் படுமாறு) இழுத்துச் செல்பவரை அல்லாஹ் பார்க்க மாட்டான்' எனக் கூறினார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.
நான், நாஃபிஃ பின் அப்துல் ஹாரித் (ரழி) அவர்களின் விடுதலை செய்யப்பட்ட அடிமையான முஸ்லிம் பின் யசாரிடம், நான் அவர்களுக்கு இடையில் அமர்ந்திருந்தபோது, பெருமையினால் தனது கீழாடையை இழுத்துச் செல்பவரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எதையும் இப்னு உமர் (ரழி) அவர்கள் கேட்டிருக்கிறார்களா என்று கேட்குமாறு உத்தரவிட்டேன்.
அவர் கூறினார்கள்: நான் அவரை (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு கூறுவதைக் கேட்டேன்: மறுமை நாளில் அல்லாஹ் அவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.