حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ كَانَتْ إِذَا أُتِيَتْ بِالْمَرْأَةِ قَدْ حُمَّتْ تَدْعُو لَهَا، أَخَذَتِ الْمَاءَ فَصَبَّتْهُ بَيْنَهَا وَبَيْنَ جَيْبِهَا قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنَا أَنْ نَبْرُدَهَا بِالْمَاءِ.
ஃபாத்திமா பின்த் அல்-முன்திர் அறிவித்தார்கள்:
அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி அழைத்து வரப்படும்போதெல்லாம், அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்; பிறகு தண்ணீரை எடுத்து அப்பெண்ணுக்கும் அப்பெண்ணின் ஆடைக்கும் இடையில் (கழுத்துப் பகுதியில்) ஊற்றுவார்கள். மேலும், "தண்ணீரைக் கொண்டு காய்ச்சலைக் குளிர்விக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" என்றும் கூறுவார்கள்.