حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ح. وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، وَذَكَرَ الصَّدَقَةَ وَالتَّعَفُّفَ وَالْمَسْأَلَةَ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، فَالْيَدُ الْعُلْيَا هِيَ الْمُنْفِقَةُ، وَالسُّفْلَى هِيَ السَّائِلَةُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) இருந்தபோது தர்மம் பற்றியும், பிறரிடம் நிதி உதவி கேட்பதைத் தவிர்ப்பது பற்றியும், பிறரிடம் யாசிப்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்: "உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது. உயர்ந்த கை கொடுப்பவரின் கை; தாழ்ந்த கை யாசிப்பவரின் கை."
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்துகொண்டு ஸதகா (தர்மம்) பற்றியும் யாசிப்பதைத் தவிர்ப்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்கள் கூறினார்கள்:
உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது. உயர்ந்த கை என்பது கொடுக்கும் கை; தாழ்ந்த கை என்பது யாசிக்கும் கை.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தர்மத்தைப் பற்றியும், (பிறரிடம்) யாசிப்பதைத் தவிர்ப்பதைப் பற்றியும் குறிப்பிடும்போது கூறினார்கள்: "உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது; உயர்ந்த கை என்பது கொடுப்பதாகும், தாழ்ந்த கை என்பது யாசிப்பதாகும்."