حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْحُبَابِ، سَعِيدَ بْنَ يَسَارٍ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ. وَهْىَ الْمَدِينَةُ، تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ .
நான் ஒரு ஊருக்கு (ஹிஜ்ரத் செய்யும்படி) கட்டளையிடப்பட்டேன்; அது மற்ற ஊர்களை விழுங்கிவிடும் (வென்றுவிடும்). யத்ரிப் என்று அழைக்கப்படும் அதுவே மதீனாவாகும். மேலும் கொல்லனின் உலை இரும்பின் கசடை அகற்றுவது போல் அது (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்: நான் ஒரு ஊருக்கு (புலம் பெயருமாறு) கட்டளையிடப்பட்டுள்ளேன்; அது (மற்ற) ஊர்களை மிகைத்துவிடும். அவர்கள் (மக்கள்) அதை யஸ்ரிப் என்று அழைக்கிறார்கள்; அதுவே மதீனா ஆகும். உலை இரும்பின் கசடை அகற்றுவதைப் போல அது (தீய) மனிதர்களை நீக்கிவிடும்.