உஸாமா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
“நிச்சயமாக இந்தக் கொள்ளைநோய் ஒரு வேதனையாகும். இது உங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் மீதோ அல்லது பனீ இஸ்ராயீலர்கள் மீதோ அனுப்பப்பட்டது. எனவே, (ஒரு குறிப்பிட்ட) பூமியில் அது ஏற்பட்டிருக்கும்போது, அதிலிருந்து தப்பியோடும் நோக்கில் வெளியேறாதீர்கள்; மேலும் (நீங்கள் இல்லாத) ஒரு பூமியில் அது இருந்தால், அங்கு நுழையாதீர்கள்.”
ஆமிர் இப்னு ஸஅத் அறிவித்தார்கள்:
ஒருவர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்களிடம் கொள்ளை நோய் (தாஊன்) குறித்துக் கேட்டார்கள். அப்போது உஸாமா இப்னு ஸைத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் உங்களுக்கு அதுபற்றி அறிவிப்பேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அது ஒரு வேதனையாகும்; அல்லது ஒரு தண்டனையாகும். அதனை அல்லாஹ் பனீ இஸ்ராயீல் கூட்டத்தாரில் ஒரு பிரிவினருக்கோ அல்லது உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கோ அனுப்பினான். எனவே, ஒரு தேசத்தில் அது இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்த தேசத்திற்குள் (அதைக்கொண்டு) நுழையாதீர்கள். அது நீங்கள் இருக்கும் தேசத்தில் ஏற்பட்டால், அதிலிருந்து தப்பியோடும் நோக்கில் வெளியேறாதீர்கள்."