“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் உள்ள கைஃபில் எழுந்து நின்று கூறினார்கள்: ‘எனது வார்த்தைகளைக் கேட்டு அவற்றை (மற்றவர்களுக்கு) எடுத்துரைக்கும் மனிதரை அல்லாஹ் (முகப்) பொலிவுறச் செய்வானாக! (மார்க்க) விளக்கத்தைச் சுமந்திருப்பவர், அதை விளங்காதவராக இருக்கலாம்; மேலும் அவர் அதைத் தம்மைக் காட்டிலும் நன்கு விளங்கக்கூடிய ஒருவரிடம் கொண்டு சேர்ப்பவராகவும் இருக்கலாம். மூன்று விஷயங்களில் ஓர் இறைநம்பிக்கையாளரின் உள்ளம் வஞ்சகம் கொள்வதில்லை: அல்லாஹ்வுக்காகச் செய்யும் செயல்களில் தூய எண்ணத்துடன் இருப்பது, முஸ்லிம்களின் ஆட்சியாளர்களுக்கு நன்மையை நாடி ஆலோசனை கூறுவது மற்றும் அவர்களது ஜமாஅத்தை (முஸ்லிம்களின் கூட்டமைப்பை)ப் பற்றிப் பிடித்துக் கொள்வது. ஏனெனில், நிச்சயமாக அவர்களின் பிரார்த்தனை அவர்களுக்குப் பின்னாலிருந்து (அவர்களைச்) சூழ்ந்து (பாதுகாத்து)க் கொள்ளும்.’”