ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அங்கசுத்தி (ஒளூ) செய்தார். அப்போது தம் காலில் ஒரு நகம் அளவுக்குரிய இடத்தைக் (கழுவாமல்) விட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பார்த்து, “திரும்பிச் சென்று, உமது அங்கசுத்தியை (ஒளூவை) நன்கு செய்வீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் திரும்பிச் சென்று (நன்கு ஒளூ செய்துவிட்டுத்) தொழுதார்.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا اَلْأَرْبَعِ, ثُمَّ جَهَدَهَا, فَقَدْ وَجَبَ اَلْغُسْلُ } مُتَّفَقٌ عَلَيْه ِ [1] .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் (மனைவியின்) நான்கு கிளைகளுக்கு (அதாவது, கைகால்களுக்கு) இடையே அமர்ந்து, பின்னர் அவளுடன் (உடலுறவில்) ஈடுபட்டால் (அதாவது, ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழைந்தால்), குஸ்ல் (குளியல்) கடமையாகிவிடும்.” இதை புஹாரி, முஸ்லிம் ஆகியோர் அறிவிக்கிறார்கள்.