தமீம் அத்-தாரீ (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
"அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் ஒருவரின் கரங்களில் (அவர் மூலமாக) இஸ்லாத்தை ஏற்கும் ஒரு மனிதரைப் பற்றிய சுன்னா என்ன?" என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வாழ்விலும் மரணத்திலும் மக்களில் அவரே (அதாவது, இஸ்லாத்தை ஏற்கச் செய்தவர்) அவருக்கு (இஸ்லாத்தை ஏற்றவருக்கு) மிகவும் உரிமையானவர் (அவரைப் பராமரிப்பதற்கும், அவரது விவகாரங்களைக் கவனிப்பதற்கும்)" என்று கூறினார்கள்.