حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ قَالَ وَرَأَيْتُهُ يَذْبَحُهُمَا بِيَدِهِ وَرَأَيْتُهُ
وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا قَالَ وَسَمَّى وَكَبَّرَ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கொம்புகளுடைய, கறுப்புத் திட்டுகள் கலந்த வெண்ணிறமான இரண்டு ஆட்டுக்கடாக்களை குர்பானி கொடுத்தார்கள்.
அவர் மேலும் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது திருக்கரத்தால் அவற்றை அறுப்பதையும், அவற்றின் பக்கவாட்டில் (அவற்றை நிலைநிறுத்த) தமது பாதத்தை வைத்துக்கொண்டு, அல்லாஹ்வின் திருப்பெயரை உச்சரித்து தக்பீர் கூறியதையும் கண்டேன்.