حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ ارْتَقَيْتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْضِي حَاجَتَهُ، مُسْتَدْبِرَ الْقِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருமுறை நான் ஹஃப்ஸா (ரழி) அவர்களின் இல்லத்தின் மேல் மாடிக்குச் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் கிப்லாவிற்குப் புறங்காட்டியவர்களாகவும், ஷாமை முன்னோக்கியவர்களாகவும் இயற்கை உபாதையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் என் சகோதரி ஹஃப்ஸா (ரழி) அவர்களின் வீட்டின் கூரை மீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும், கிப்லாவிற்கு முதுகைத் திருப்பியும் தமது (இயற்கைத்) தேவைக்காக அமர்ந்திருப்பதை நான் கண்டேன்."