சல்மான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவரிடம், “உங்கள் நபி (ஸல்) உங்களுக்கு எல்லாவற்றையும், மலம் கழிக்கும் முறை பற்றிக்கூடக் கற்றுத் தந்துள்ளார்கள்” என்று கூறப்பட்டது. அதற்கு அவர், “ஆம்! மலம் அல்லது சிறுநீர் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்குவதையும், வலது கையால் சுத்தம் செய்வதையும், மூன்றுக்கும் குறைவான கற்களைக் கொண்டோ அல்லது சாணம் அல்லது எலும்பைக் கொண்டோ சுத்தம் செய்வதையும் அவர்கள் எங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று பதிலளித்தார்.