அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் எதன் மூலம் பாவங்களை அழித்து, அந்தஸ்துகளை உயர்த்துகின்றானோ அதனை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?" அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றனர். அவர்கள் கூறினார்கள்: "சிரமங்களுக்கு மத்தியிலும் முழுமையாக உளூச் செய்வதும், பள்ளிவாசல்களுக்கு அதிக அடிகள் எடுத்து வைப்பதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இதுவே (மார்க்கக் காவலான) எல்லைப் பாதுகாப்பாகும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அழித்து, (மக்களின்) அந்தஸ்துகளை உயர்த்துகிறானோ அதைப்பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? சிரமமான நேரங்களிலும் முழுமையாக உளூ செய்வது 1, மஸ்ஜிதுக்கு அதிகமாக எட்டு வைத்துச் செல்வது, மேலும் ஒரு ஸலாத்திற்குப் பிறகு அடுத்த ஸலாத்திற்காகக் காத்திருப்பது. அதுவே உங்களுக்கு ரிபாத் ஆகும், அதுவே உங்களுக்கு ரிபாத் ஆகும், அதுவே உங்களுக்கு ரிபாத் ஆகும்." 1 இஸ்ஃபாகுல் உளூ