அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவருக்கேனும் தமது வயிற்றில் ஏதேனும் இருப்பதை உணர்ந்து, தம்மிடமிருந்து ஏதேனும் (காற்று) வெளியானதா இல்லையா என்பதில் சந்தேகம் ஏற்பட்டால், அவர் ஒரு சப்தத்தைக் கேட்காத வரை அல்லது ஒரு வாசனையை நுகராத வரை பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம்."