அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ரு (தொழுகையை) தொழுதார்கள்; பிறகு கூறினார்கள்: 'குர்ஆனுடையோரே! வித்ரு (தொழுகையை) தொழுங்கள். ஏனெனில், வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் ஒற்றையானவன் (வித்ரு); மேலும் அவன் ஒற்றையை (வித்ரு தொழுகையை) விரும்புகிறான்.'"