இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

930ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ ‏"‏ أَصَلَّيْتَ يَا فُلاَنُ ‏"‏‏.‏ قَالَ لاَ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَارْكَعْ ‏"‏‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு வெள்ளிக்கிழமை அன்று நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை (குத்பா) நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "இன்னாரே! நீர் தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "எழுந்து தொழுவீராக" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
875 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، - وَ هُوَ ابْنُ زَيْدٍ - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَصَلَّيْتَ يَا فُلاَنُ "‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَارْكَعْ ‏"‏ ‏.‏
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, அங்கு ஒருவர் வந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்னாரே, நீர் (இரண்டு ரக்அத்கள்) தொழுதுவிட்டீரா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர், ‘இல்லை’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் எழுந்து தொழுங்கள்” என்றார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1409சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ صَلَّيْتَ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَارْكَعْ ‏"‏ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று குத்பா நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் வந்தார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீர் தொழுதீரா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இல்லை' என்றார். அதற்கு அவர்கள், 'எழுந்து தொழுவீராக' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)