இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2188ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنهم ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَرْخَصَ لِصَاحِبِ الْعَرِيَّةِ أَنْ يَبِيعَهَا بِخَرْصِهَا‏.‏
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அரிய்யா’ (எனும் குறிப்பிட்ட வகை பேரீச்ச மரத்தின்) உரிமையாளருக்கு, அதை (அதில் உள்ள கனிகளை) உத்தேச மதிப்பீட்டின்படி (காய்ந்த பேரீச்சம்பழத்திற்குப் பகரமாக) விற்பதற்குச் சலுகை அளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3842ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ، بْنِ ثَابِتٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ لِصَاحِبِ الْعَرِيَّةِ أَنْ يَبِيعَهَا بِخَرْصِهَا مِنَ التَّمْرِ ‏.‏
ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அரிய்யா’ உடையவர் (அதாவது, தானமாக வழங்கப்பட்ட பேரீச்ச மரத்தின் பழங்களை உடையவர்), அதனை (மரத்திலுள்ள ஈரப் பேரீச்சம்பழத்தை), காய்ந்த பேரீச்சம்பழத்தின் மதிப்பீட்டு அளவுக்கு நிகராக விற்பனை செய்யச் சலுகை அளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3847ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي الْعَرَايَا أَنْ تُبَاعَ بِخَرْصِهَا كَيْلاً ‏.‏
ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அராயா’வில் (மரத்திலுள்ள பேரீச்சம்பழங்களை) மதிப்பிட்டு அளந்து விற்பதற்குச் சலுகை அளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح