ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்து மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வெளியே சென்றார்கள். பின்னர் என்னிடம் சோகமாகத் திரும்பி வந்தார்கள். நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் என்னிடமிருந்து மகிழ்ச்சியாக வெளியே சென்றீர்கள்; ஆனால் சோகமாகத் திரும்பி வந்துள்ளீர்களே?’ அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘நான் கஅபாவிற்குள் நுழைந்தேன். நான் அவ்வாறு செய்யாமல் இருந்திருக்க விரும்புகிறேன். ஏனெனில், எனக்குப் பிறகு என் உம்மத்திற்கு (கஅபாவிற்குள் நுழைவது போன்ற செயல்களை ஒரு சுன்னத்தாகக் கருதி, அதைச் செய்ய முயற்சிக்கும்போது) நான் சிரமத்தை ஏற்படுத்தி விட்டேனோ என்று அஞ்சுகிறேன்.’”