ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஒரு முள் குத்துவதாலோ அல்லது அதைவிடப் பெரிய (எந்தவொரு) துன்பம் ஏற்படுவதாலோ, அதன் மூலம் அல்லாஹ் அவருக்கு ஒரு படித்தரத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை அல்லது அவரின் ஒரு பாவத்தை அழிக்காமல் இருப்பதில்லை."