சமுரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் ஆடைகளில் வெண்மையானவற்றை அணியுங்கள்; நிச்சயமாக அவை மிகவும் தூய்மையானதும், மிகவும் விரும்பத்தக்கதும் ஆகும் (ஏனெனில் அவை அழுக்கைக் காட்டுவதோடு, எளிதில் சுத்தம் செய்யக்கூடியவை). மேலும், உங்களில் மரணித்தவர்களுக்கு அவற்றைக் கொண்டே கஃபனிடுங்கள்."
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் ஆடைகளில் வெண்ணிற ஆடைகளை (அணியப்) பயன்படுத்துங்கள், ஏனெனில் அவை உங்கள் ஆடைகளில் சிறந்தவையாகும். மேலும், அவற்றில் உங்கள் இறந்தவர்களையும் கஃபனிடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் சுர்மா வகைகளில் மிகச் சிறந்தது இத்மித் (அஞ்சனக்கல்) ஆகும். ஏனெனில் அது பார்வையைத் தெளிவாக்கி, (கண்) முடிகளை வளரச் செய்யும்.
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا أَنَّ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم -قَالَ: { الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ, فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ, وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ } رَوَاهُ اَلْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ, وَصَحَّحَهُ اَلتِّرْمِذِيُّ [1] .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களின் ஆடைகளில் வெள்ளை நிற (ஆடைகளை) அணியுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவை உங்களின் சிறந்த ஆடைகளில் உள்ளவையாகும். மேலும், உங்களில் இறந்தவர்களை அவற்றில் கஃபனிடுங்கள்.”
இதை அந்-நஸாஈயைத் தவிர ஐந்து இமாம்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் அத்-திர்மிதி அவர்கள் இதை ஸஹீஹானது எனக் கூறியுள்ளார்கள்.