அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"மக்கள் தொடர்ந்து (கேள்வி கேட்டுக்கொண்டே) இருப்பார்கள்..." (என்று தொடங்கும் இந்த ஹதீஸ்,) அப்துல் வாரிஸ் அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்றே உள்ளது. ஆனால் (அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் இந்த அறிவிப்பில்) நபி (ஸல்) அவர்களை (நேரடியாக) அறிவிப்பாளர் தொடரில் குறிப்பிடவில்லை. எனினும் ஹதீஸின் இறுதியில், "அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மையையே உரைத்தனர்" என்று குறிப்பிட்டார்.