அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்குத் திருமணம் நடந்தால், (அவருக்கு) வாழ்த்துத் தெரிவிக்கும்போது, 'பாரகல்லாஹு லக, வபாரக அலைக்க, வஜமஅ பைனகுமா ஃபீ கைர்' (அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! உன் மீது அருள் புரிவானாக! உங்கள் இருவரையும் நன்மையில் ஒன்றிணைப்பானாக!) என்று கூறுவார்கள்.