அப்துல்லாஹ் பின் `உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவன் அவனுக்கு அநீதி இழைக்கமாட்டான்; அவனைக் கைவிடவும் மாட்டான் (அல்லது எதிரிகளிடம் ஒப்படைக்க மாட்டான்). எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகின்றாரோ, அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றுவான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ, அல்லாஹ் அவரை விட்டும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமை(ன் குறையை) மறைக்கிறாரோ, அல்லாஹ் மறுமை நாளில் அவரை மறைப்பான்."
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَالِمًا، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ، وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ، كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் அவருக்கு அநீதி இழைக்கவோ, அவரை (உதவியின்றி) கைவிடவோ கூடாது. எவர் தன் சகோதரரின் தேவையை நிறைவேற்றுகிறாரோ, அல்லாஹ் அவனது தேவையை நிறைவேற்றுவான்."
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் அவருக்கு அநீதி இழைக்கவோ, அவரைக் கைவிட்டுவிடவோ (அல்லது ஆபத்தில் சிக்கவைக்கவோ, எதிரிகளிடம் ஒப்படைக்கவோ) கூடாது. எவர் தம் சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் இருக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் இருப்பான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ, அல்லாஹ் அவரைவிட்டு மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் (குறைகளை) மறைக்கிறாரோ, மறுமை நாளில் அல்லாஹ் அவரை மறைப்பான்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என அறிவித்தார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்; அவன் அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான் அல்லது (ஆபத்தில்) கைவிடவும் மாட்டான். எவர் தனது சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ, அல்லாஹ் அவனுடைய தேவையை நிறைவேற்றுவான்; எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ, அதன் காரணமாக மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அவரை விட்டும் நீக்குவான்; மேலும், எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ, மறுமை நாளில் அல்லாஹ் அவனுடைய குறையை மறைப்பான்.