தாபித் பின் அழ்-ழஹ்ஹாக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(அல்லாஹ்வின்) அடியான் தனக்கு உரிமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது (அவன் மீது) கடமையில்லை; ஒரு முஃமினை (இறைநம்பிக்கையாளரை)ச் சபிப்பது அவரைக் கொலை செய்வதற்குச் சமமாகும்; எவர் ஒரு முஃமினை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று பழிசுமத்துகிறாரோ அவர், அவரைக் கொலை செய்தவரைப் போன்றவராவார்; மேலும் எவர் ஏதேனும் ஒன்றைக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாரோ, மறுமை நாளில் அல்லாஹ் அவரை அதைக் கொண்டே தண்டிப்பான்."